I-POD ROMANCE
தலைப்பை பார்த்தவுடனே ஏதோ காதல் மயமான பதிவு அதாங்க ,"Romantic post "அப்படீன்னு நீங்க நினைச்சா, அது நூறு சதம் சரிதாங்க!! ஆனா இந்த கதைக்கு சுப முடிவா , சோக முடிவானு எனக்கே தெரியலங்க! படிச்சுட்டு நீங்க தான் சொல்லணும்.
இந்த மாதம் எங்களோட wedding day வருது. மொத்தமா ஆறு வருஷம் முடிச்சு போச்சுது . ஓடினதே தெரியலை அப்படீன்னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம். எல்லாம் தெரிஞ்ச வேகத்தொடதான் ஓடி போச்சுது. Romance-ந கிலோ என்ன விலைன்னு கேக்குற என்கூட (நாங்க எல்லாம் மனசு முட்ட காதல் இருந்தாலும் வெளில காட்ட மாட்டோம்ல !!!) வாழ்க்கைல எல்லாத்துக்கும் Romantic touch வேணும்னு நினைகிற ஷங்கர் ஆறு வருஷம் குப்பை கொட்டினது, கொட்ட போறது எல்லாம் இமாலய சாதனைதான். ஆனா ஷங்கர் இதுக்கு எல்லாம் அசந்து போற ஆளே கிடையாது. வருஷா வருஷம் ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் எனக்கு எதாவது surprise gift கொடுக்கனும்கிரத வாழ்கையின் லட்சியமா வைச்சுட்டு இருக்காரு என் புருஷன். ஆனா நானும் சளைக்காம கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த பரிசை குறைசொல்ல தயங்கினதே இல்லை. அவரும் அதுக்கு அசந்து போனதே இல்லை. ஏன்னா, பின்னால ஒருநாள் எப்பிடிப்பா இப்பிடி யோசிச்சு வாங்கின? very useful அப்படீன்னு சொல்லி பாராட்டி தள்ளி இருக்கேன். அப்படி வந்த ஒரு பரிசு தான் இந்த ipod .
உங்களுக்கு அறிவு எங்க போச்சுது, எனக்கு இருக்கிற வேலைக்கு பாட்டு கேக்கவா நேரம் , தண்டத்துக்கு செலவு பண்ணி இருக்கேங்க . இந்த காசு இருந்தா பத்து தடவை சரவணா பவன் ல சாப்பிட்டு இருக்கலாம் அப்படீன்னு கத்தி அழிச்சாட்டியம் பண்ணி , எல்லாம் முடிஞ்சுது. வழக்கம் போல ஒரு பத்து நாளைக்கு பிறகு பாட்டு கேக்கவும் ஆரம்பிச்சாச்சு. கர்ணனோட கவச குண்டலம் மாதிரி எனக்கு ipod மாறி போனதில் பெரிய ஆச்சர்யம் இல்லை .
அது இல்லாம நான் இல்லை நான் இல்லாம அது இல்லைன்னு ஒரு நிலைமை .எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி நடக்கிற வரை.
வழக்கம் போல எங்க apartmentl -ல சுதந்திர தினம் கொண்டாட்டம் வந்தது.. நான் ஒரு "மனுஷர் அண்டா மரகுரங்கு"என் புருஷனுக்கோ எப்பவும் ஒரு பத்து பேர் வீட்டுல இருக்கணும். வீட்டுக்கு உழைக்கவே அழுவேன் நான். ஆனா ஊருக்கு உழைக்கும் உத்தமர் என் புருஷன். god is the best match maker .வழக்கம் போல எல்லா பொறுப்பும் ஷங்கர் தலையில .அதோட என் நச்சரிப்பும் , கொஞ்சம் கூட அசரவே இல்லையே மனுஷன்.
என்னை தவிர எங்க ப்ளாட்ல இருக்கிற எல்லாரும் ஆர்வமா நிகழ்ச்சி தயாரிப்புல பங்க எடுத்தாங்க. . கூட்டத்தை பார்த்தாலே எனக்கு ஆகாது. எங்க ப்ளாட்ல இருந்து யாரும் எங்க வீட்டுக்கு என்னை தேடி வந்ததே இல்லை. எல்லாரும் ஷங்கரை தேடித்தான் வருவாங்க. இதுல அழகான பொண்ணுங்க வேற. "ஷங்கர் இருக்காரா , program பத்தி discuss பண்ணனும் " அப்படீன்னு வருவாங்க. பரவாயில்லை என்கிட்டே சொல்லுங்க நான் சொல்றேன்னு சொன்னா, இல்லை நாங்க அவர்கிட்டயே பேசிக்கிறோம் அப்படீன்னு கடுப்பை கிளப்புவாளுங்க. எல்லாம் சேர்ந்து நான் ஒரு நிலையில இருந்தேன்.
கொண்டாட்ட நாளும் வந்தது. பாருங்க, நான் பண்ணின ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்கு சொல்லவே மறுத்துட்டேன். சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தேவையான் எல்லா தேச பக்தி பாடல்களும் , தேசிய கீதம் உட்பட எல்லா பாட்டும் என் i-pod லதான் பதிவு ஆகி இருந்துது . எங்களுக்கும் தேச பக்தி உண்டுல்ல !! ஷங்கர் பல முறை கேட்டு என் சம்மதம் வாங்கின பின்னால தான் இது நடந்துது. ஆனா அதுக்கு அப்புறம் ?
நிகழ்ச்சியும் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. நான் வழக்கம் போல ஒன்னும் பண்ணலை.என் பொண்ணுக்கும் , ஷங்கர் க்கும் என்னை பார்க்க நேரம் இல்லை. அவ்வளவு பிஸி. எனக்கு உலகமகா கோபம்.ஆனா வெளி காட்ட முடியலை. நிலைமை இப்பிடி இருக்க , ரெண்டு நாள் ஓடி போச்சுது. திடீர்னு காலைல ஆறு மணிக்கு எனக்கு i-pod ஞாபகம் வந்தது.எனக்கு இருந்த கோபத்துல அதை பத்தி நினைக்கவே மறந்துட்டேன். என் நல்ல நேரமா ஷங்கர் கெட்ட நேரமான்னு தெரியலை. அது தொலைஞ்சு போச்சு அப்படீங்கிற விஷயமே அப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் உறைச்சுது. now the ball was in my court . இதை விட்டா வேற நல்ல சந்தர்பம் கிடைக்காது மஹா , go ahead அப்படீன்னு எனக்குள்ள ஒரு அசிரீரி ஒலிச்சுது. சும்மாவே ஆடுவேன். இதுல பாட்டு வேற போட்டு விட்டா கேக்கவா வேணும் ?
"என் மேல கொஞ்சமாது அன்பு இருந்தா இப்பிடி பண்ணி இருப்பீங்களா,? எனக்கு அந்த i-pod பார்க்குபோது எல்லாம் நம்ம காதல்தான் நினைவுக்கு வரும். அதை போய் தொலைச்சுட்டு வந்துடீங்க , நம்ம காதலே போச்சுது அப்படி இப்படீன்னு நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினதுல ஷங்கர் உச்சகட்ட கவலைல இருந்தாப்ல . He spent really one full day to search for that.எனக்கு புதுசு வேண்டாம் அதுதான் வேணும்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தேன். ஒரு ஆயிரம் தடவைஎன் கிட்ட மன்னிப்பு கேட்ட பின்னாலயும் ஷங்கர் கவலை படுறதை நிறுத்தவே இல்லை. எனக்கு பெரிசா பாதிப்பு இல்லை. நான் திட்டணும்னு நினச்சேன் திட்டிட்டேன். ஷங்கர் தான் காதல் பரிசு தொலைஞ்சு போச்சேன்னு ஒரு நாள் பூரா சரியாய் சாப்டாம தேவதாஸ் மாதிரி அலைஞ்சுட்டு இருந்தாரு. நாளும் ஓடி போச்சுது.
மறுநாள் காலைல எனக்கு பிடிக்காத , எப்போவும் ஷங்கர் பண்ற வேலைய அதுதாங்க washing machine la இருந்து துணி காய போடுற வேலையை பண்ணிட்டு இருந்தேன். எப்போவும் துவைக்க போடுறது என் வேலை. காய போடுறது, ஷங்கர் வேலை. ஷங்கர் மேல உள்ள கோபத்துல வேண்ட வெறுப்பா அந்த வேலைய பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் அந்த விஷயம் என் தலைல இடி விழுற மாதிரி நடந்தது. washing machine அடியில ipod !! ஐயோ !!அப்போதான் வழக்கம் போல பாக்கெட் ல என்ன இருக்குன்னு பார்ககாம கடமைக்கு ஷங்கர் சட்டையை துவைக்க போட்ட என் flashback ஞாபகம் வந்தது. surf போட்டு துவைச்ச பின்னால அது பாடினா ஆச்சர்யம். ஆனாலும் அநியாத்துக்கு அது நல்ல புள்ளையா பாடுச்சுது. ஷங்கர் காதல் பாட வைச்சுது போல.பிள்ளையாரப்பா , நீ உன் பக்தைய கை விட்டதே இல்லை . இது மட்டும் ஷங்கர் கைல கிடைச்சு இருந்துது ? , பிள்ளையாரப்பா i love you .
வழக்கம் போல ஆபிஸ் ல இருந்து சோகமா ஷங்கர் என்ட்ரி கொடுத்தாரு . பின்ன காதல் நா உயிரை கொடுக்குற category ஆச்சே நம்ம ஆளு. நான் விட்டேத்தியா , ரொம்ப கவலைப்பட வேணாம் ,நம்ம காதல் எங்கயும் போகலை , திரும்ப கிடைச்சாச்சு அப்படீன்னு சொன்னேன். பின்ன வார்த்தைல கொஞ்சம் ஆர்வம் தெரிஞ்சாலும் நான் தொலைஞ்சேன். He is very smart enough.ஷங்கர் முகத்துல ஒரு 10000 watts பல்பு எரிஞ்சுது. எங்க இருந்துது எங்க இருந்துது அப்படீன்னு ஆயிரம் கேள்வி. அதுக்கு நான் , "love தான் ஒழுங்க பண்ண தெரியலை , தேடுறதை கூடவா ஒழுங்கா செய்ய தெரியாது" அப்படீன்னு அலுத்துகிட்டேன்.பின்ன , நாதாரித்தனம் பண்ணினாலும் நாசுக்க பண்ணனும் .ஐயோ பாவம் ,அந்த i pod -யா ஒரு அரை மணி நேரமா காதலா பார்த்துட்டு இருந்துது அந்த அப்பாவி ஜீவன் !!!
-- மகா
Friday, January 20, 2012 | Labels: மகா | 1 Comments
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நம்ம பார்வை எப்போதும் உலகளாவிய பார்வை தான். :)
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
Saturday, December 31, 2011 | Labels: 2012, வாழ்த்து | 3 Comments
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
Sunday, August 21, 2011 | Labels: வாழ்த்து | 1 Comments
குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்
நன்றி - வெயிலோன் திரை
(வணிக நோக்கமில்லாத பகிர்வு மட்டுமே)
(வணிக நோக்கமில்லாத பகிர்வு மட்டுமே)
Thursday, June 30, 2011 | Labels: இணையம், குறும்படம், பகிர்வு | 0 Comments
போயின பத்தாண்டுகள் இன்றோடு!
தின்னவேலி ஜங்ஷன்
தேசிய நெடுஞ்சாலை 47
காலேஜ் ஸ்டாப் நிற்காது
கணபதி பஸ் சர்வீஸ்
இவ்ளோ தூரமா!
கவர்மெண்ட் காலேஜ் !!
சர்வோதயா, சுப்புடு மெஸ்
காலேஜ் பின்பக்க காம்பவுண்ட் சுவர்
இன்ஜினியர்ஸ் மேக் த வேர்ல்ட்
தமிழ் கிடையாது
மினி டிராஃட் அல்லது டி.ஸ்கொயர்
ரப்பர் செப்பல், மஞ்சள் பை
அண்டா காக்டெயில்
மாருதி பரோட்டா
பொன்னாங்குடி பை நைட்
ஸ்ட்ரைக் ஐ.டி.சி. செமஸ்டர்
அழுக்குமூட்டை தாமிரபரணி
பொருணை டூ காவேரி
சன்டே மசால்தோசை
அரசன் ஜானகிராம்
டைஸ்
டங்க்ஸ்டன் ஆக்காதே
சித்ராதேவி புக்ஸ்டால
எல்.ஹச் வழியாக மூன்றடைப்பு
'ஏ' விலுருந்து 'பி','சி'
வழியாக 'இ' வரை செல்லும்
அதிவேக ஜொள்ளு வண்டி
இடையில் 'டி' யில் நிற்காது
தேக்கடி, சுருளி
மொச்சக் கொட்ட பல்லழகி
பிறந்தநாள் அபிஷேகம்
பி.ஜி. சேர்மன் தேர்தல்
ஜூனியரை ஏன் அடிச்ச?
சும்மா டைம்பாஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
பசுமை நிறைந்த... பேச்சைக் குறைடா!
தின்னவேலி ஜங்ஷன்
ஜூன் 2 !!!
போயின பத்தாண்டுகள் இன்றோடு :)
நட்புடன்,
வி.பாலகுமார்
Thursday, June 02, 2011 | Labels: கல்லூரி, திருநெல்வேலி | 8 Comments
குறும்படம் - இணையத்திலிருந்து.
நன்றி : "Green Horns Entertainment and Pixelite Studios"
(வணிக நோக்கமில்லாத பகிர்வு மட்டுமே)
Monday, October 18, 2010 | Labels: இணையம், குறும்படம், பகிர்வு | 6 Comments
Subscribe to:
Posts (Atom)
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- MP3
- அறிமுகம்
- ஆனந்தி
- ஆர்த்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- தினமணி
- திருநெல்வேலி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்



