ஹட்சனுக்கு கல்யாணம் !
ஒரு காலத்துல, பையன் இப்படி இருந்தது உண்மை தான்.
ஆனா, இப்ப இப்படி ஆகிட்டான்.
காரணம் இது தான்.
வாழ்த்துக்கள் ஹட்சன் - மெர்சி !
Monday, December 07, 2009 | Labels: வாழ்த்து | 3 Comments
பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை
தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான். அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம்.
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா? போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை.
ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான் பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு, 3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.
(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு :
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான்.
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல் 3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால்
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம்.
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
• Nokia N95,N96,N82,N73
• Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
• K 660i, K 610i, K530i
• P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
• Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
• MotoRazor V9
• Apple 3G I Phone • HTC
• Blackberry Bold 9000
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.
தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb
source : http://solaiazhagupuram.blogspot.com/
Thursday, November 26, 2009 | Labels: சோலைஅழகுபுரம், தொழில்நுட்பம் | 6 Comments
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா !!!!
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ?
வர்றவங்களாம் மறக்காம, ஒரு Attendance போட்டுட்டு போங்க....
உங்க ஞாபக சக்திக்கு ஒரு சோதனை !
இந்த photo வை எடுத்தது, யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்....
Friday, October 09, 2009 | Labels: GCE, கல்லூரி, திருநெல்வேலி | 9 Comments
நான்மாடக்கூடல் புகைப்படங்கள் !
மதுரையில் ஆகஸ்ட் 29, 2009 முதல் செப்டம்பர் 8, 2009 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக "நான்மாடக்கூடல்" ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
"மதுரையில் ஓவியங்கள் - ஓவியங்களில் மதுரை" எனும் தலைப்பில் இடம்பெற்ற ஓவியங்களில் சில.
Monday, September 07, 2009 | Labels: சோலைஅழகுபுரம் | 0 Comments
இது முடிவல்ல !
Wednesday, August 26, 2009 | Labels: சோலைஅழகுபுரம் | 3 Comments
சாகாவரம் பெற்ற MP3 க்கள்
அநேகமாய் 1987 களில் ஆரம்பிக்க பட்ட MPEG குழுமம் , 1997 வாக்கில் MPEG Audio Layer 3 என்ற MP3 யை வெளிக்கொண்டு வந்தது.
நோக்கம்: 1. கம்ப்யூட்டர் எல் குறைந்த இடத்தை அடைத்து கொண்டு, சாசுவாதமாக இசையை "play" செய்ய வேண்டும். 2. எங்கும் நீக்கமற பின்னிபினைந்திருக்கும் இணைய தளத்தில் எளிதாக, குறைவான பொருள் செலவில் அதே சமயத்தில் தரமான ஒலியுடன் கூடிய இசை கோப்புகளை உலவ விட வேண்டும்.
சாதாரண இசை கோப்புகளில் (.WAV) இருந்து "high perceptional" அலை துடிப்புகளை நாசூக்காக கத்தரித்து விட்டு, பெரும்பாலான "Human perceptional" அலைகளை துடிக்க செய்ய மண்டையை பிய்த்து கொண்டு "Mp3 Codec" களை உருவாக்கிருக்கிறார்கள்.
இதன் மூலம் சாதாரண இசை கோப்புகள் (.WAV) கம்ப்யூட்டர் -ல் ஆக்கிரமிக்கும் இடத்தைவிட பத்து மடங்கு குறைவான இடத்தை MP3 இசை கோப்புகள் பிடிக்கும்படி செய்திருக்கிறார்கள், ஒலி தரம் ரொம்பவும் கெட்டு விடாதபடி......விளைவாக 700MB குறுந்தகட்டில் 150 ற்கும் அதிகமான பாடல்களை பதிவு செய்யக்கூடிய வசதிகள் அறிமுகமானது...
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கும் MP3 ஒலி வடிவங்களுக்கு இனி அழிவு உண்டா?
என்னை கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. , காரணம்,
1. MP3 format களை விட குறைவான இடத்தை அடைத்து கொள்ளும் format கள் வந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக உலகெங்கும் வியாபித்திருக்கும் MP3 பிளேயர்கள் அவற்றை தலை தூக்க விடாது. வேறு புதிது புதிதாக music format கள் வந்தாலும் , MP3 compatibilty இல்லாமல் மார்க்கெட்டில் பிளேயர்கள் போணியாகாது. (இதே பாணியில் GSM phones Vs CDMA phones யும் விளக்க முடியும்; இப்போது இதை படிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் வைத்திருப்பது GSM Phones, சரிதானே !).....எத்தனையோ கழுதை , குதிரை music format கள் வந்து மறைந்து போனதும் இதன் காரணமாகத்தான்...
2. "பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை...புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை" என்பவர்கள் சிறந்த music system மற்றும் acoustic இருந்தாலொழிய உங்களுக்கு .WAV ற்கும் MP3 இசை கோப்பிற்கும் ஆனா பெரிதான ஒலித்தர வித்யாசங்களை கேட்டுணர முடியாது.....தலைக்கு மேலே "fan" சுற்றிகொண்டிருந்தாலே போச்சு கதை அம்பேல் ...சிரமப்பட்டு 15 KHz க்கு மேலாக ஒலி தரத்தை துல்லியமாக கேட்டு என்ன பெரிதாக மகிழ்ந்து விட போகிறீர்கள்...எப்பவாவது என்றால் முடியும்... ஆனால் எப்பவுமே முடியாதே.... MP3 ஒலிக்கும் போதே நாம் பெரும்பாலும் உணர கூடிய crisp கிடைத்து விடுகிறது .....i hope all of u got the point.....
3. இணையதள ஊடாக எளிதான பரிமாற்றம்
முக்கியமாக மேற் சொன்ன மூன்று காரணங்கள் MP3 format ஐ சாகா வரம் பெற்ற பிறவியாக மாற்றும் என்று என்னை நம்ப தூண்டுகிறது.
நாளை என்னவாக ஆகுமோ ?
-மதன்
Saturday, August 08, 2009 | Labels: MP3 | 2 Comments
you too பிள்ளையாரப்பா !!!
உங்க எல்லோருக்கும் திரும்பவும் தொல்லை கொடுப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.வாழ்கையில எப்போவும் சந்தோஷமே வந்துட்டு இருந்தா நல்லவா இருக்கும்.? so i am forcing u people to read my article. "பாலா ,மதன் மாதிரி பெரிய range ஆளுங்களோட எழுதற அளவுக்கு இசக்கி உனக்கு ரொம்ப தைரியம்தான்னு சிவரஞ்சனி என்னை கேவலமா திட்டியதை கூட நான் ரொம்ப பெரிசா எடுத்துக்கலை .யென்ன அவங்க எல்லோரும் முன்னமே எழுதுவாங்கன்னு தெரியும்.ஆனா இந்த ஆர்த்தி ? (எவ்வளவு அடிபட்டாலும் தாங்குற மஹா , u are so great !!!)
கதைய எங்க விட்டேன்.? கடைசி check upkku போனதோட விட்டேன். அதுக்கு முன்னால விஷயம் தெரியாதவங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்க ஆசைபடுறேன். இந்த சுக பிரசவம்ன்னு சொன்னா AC roomla எந்த வலியும் இல்லாம நடக்கிற பிரசவம் கிடையாது. எந்த கிறுக்கு பயலோ புரியாம வைச்ச பேர் அது. ( மதன் kindly note down the point) சரி அது கிடக்குது. நம்ம கதைக்கு வருவோம். டாக்டர் அம்மாவும் செக் பண்ணினாங்க.எடை பார்க்க சொன்னாங்க. வழக்கம் போல weight machine எனக்கு ஆப்பு வைத்தது . எங்க அம்மா கண்ணீர் விட்டு ஆஸ்பத்திரிய மிதக்க விட்டாங்க. ஏன் டாக்டர் சுக பிரசவம் ஆகுறது கஷ்டமான்னு ஒரே அழுகை. எனக்கும் ஒரே கவலை. ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு அம்மா நல்ல வடை சுடுவாங்க. எப்போ check up வந்தாலும் வாங்கி சாபிடுவேன். ஆனா இப்போ கேட்டா கிடைக்காதே. ச! மனுஷன் நினைச்சதை கூட வாங்கி சாப்பிட முடியலைடா சாமி !!! எனக்கு அழுவாச்சியா வந்துச்சு. எங்க அம்மா உடனே இப்போ அழுது என்ன பிரயோஜனம் ? நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். பிள்ளைன்னா பெத்தவங்க பேச்சை கேக்கணும் ,இல்லன்னா இப்படிதான் அழனும் அப்படி இப்படீன்னு ஒரே புலம்பல். உடனே டாக்டர் ச்ம்தன படுத்தி இன்னும் ஒரு பத்து நாள் இருக்கு இதுக்கு மேல weight போடாம பார்த்துக்கோங்க .சுக பிரசவத்துக்கு 90 சதவீதம்
வாய்ப்பு இருக்குன்னு சொல்ல ,எனக்கு என்னடா இது வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறியாச்சேன்னு ஒரே கவலை. எங்க அம்மா முகத்தில ஒரே சிரிப்பு.
நான் வீட்டுக்கு வந்ததும் சாமி முன்னால உக்கார்ந்து ஒரே மிரட்டல்தான் .எனக்கு தப்பி தவறி சுக பிரசவம் ஆச்சுது ,அவ்வளவுதான் நடக்கிறதே வேற ,பிள்ளையாரப்பா , அப்படி எதாவது நடந்தது ,உன் முன்னால தினசரி பாடுவேன். .நான்தான் என் கையால உனக்கு கொழுக்கட்டை செஞ்சு தருவேன். so be careful!!! இப்படி ஏகத்துக்கும் மிரட்டி வைச்சு இருந்தேன்.
எங்க ஊருக்கு போனாலே குஷிதான் .எங்க அப்பா தினசரி வேலை முடிந்து வரும்போது ஏதாவது வடை ,பஜ்ஜின்னு வாங்கிட்டு வருவாங்க. எனக்கு ஒரே கொண்டாட்டம்தான். பங்கு கேக்கிறதுக்கு யாரும் இல்லை. அப்பாவும் அம்மாவும் as usual கேக்க மாட்டங்க . ஒரே குஷிதான் . ஆனா இப்போதான் நிலைமை தலைகீழா மாறிபோச்சே. சோக கடல்ல மூழ்கி முத்து எடுத்துட்டு இருந்தேன். ஒரு நாள் எங்க அம்மா கோயில் போன நேராம பார்த்து எங்க அப்பாகிட்ட பிட் போடா ஆரம்பிச்சேன்.அப்பா , எனக்கு நேந்திர பழ அப்பம் சாபிடனும் போல இருக்குப்பா ,ஒன்னே ஒன்னு மட்டும் வாங்கி தாங்கப்பா ,அம்மா சாப்பாடே சரியா போடலைப்பான்னு ஒரே ஒப்பாரி. எங்க அப்பாக்கு நான் நாலு சொட்டு கண்ணீர் விட்டா தாங்காது. சோ என்ன நடந்து இருக்கும்னு உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும்.
எங்க ம்மா வந்து வழக்கம் போல நாலு இட்லி வைக்க நான் சத்தமே போடாமா சாப்டேன். அம்மாக்கு ஒரே ஆச்சர்யம். இதே மாதிரி பத்து நாளும் ஓடி போச்சு. அக்டோபர் ஏழாம் தேதி வரை வலி வரலை.எனக்கு ஒரே சந்தோசம் .அக்டோபர் ஒன்பது நாள் கொடுத்து இருந்தாங்க. எட்டாம் தேதி , i got admitted in hospital . அம்மாக்கு வழக்கம் போல கவலை.எனக்கு ம்ம்ம்ம்ம்.............ம்ம்ம்ம்.
ஒன்பதாம் தேதி காலையும் வந்தது. டாக்டர் அம்மா வலி வரலைன்னா என்ன ஊசி போட்டு வலி வரவழைத்து விடலாம்னு ஒரு பெரிய குண்டோட என்னை கூட்டிட்டு போனாங்க. நான் போற வழி எல்லாம் பிள்ளையாரை மிரட்டிகிட்ட போனேன். ஊசியும் போட்டாங்க. என்ன நடந்து இருக்கும்னு நினைக்கீறீங்க?உங்க எல்லோரோட ஆசையை பூர்த்தி பண்ணு விதமா வலி வந்துருச்சு. எங்க அம்மாக்கு ஒரே சந்தோசம். எனக்கு இப்பிடி பிள்ளையார் இப்படி ஏமாதிடாரேன்னு ஒரே கோபம். ஆனா அவர் அப்போதான் ,பக்தையே ,உன் பக்திக்கு மெச்சினேன் . உனக்கு சுக பிரசவம் ஆகாதுன்னு அருள் பாலிச்சு இருப்பாருன்னு நினைக்கிறேன். காலைல ஒன்பது மணிக்கு அஆரம்பிச்ச வலி சாயங்காலம் எட்டு மணி வரை தொடர்ந்தது. அட ! கடவுளே நம்மதான் தப்ப வேண்டிகிட்டோம்னு அப்போதான் தோனுச்சு. வலி வராம குழந்தை பிறக்கணும்னு வேண்டாமா, சுக பிரசவம் ஆகா கூடாதுன்னு வேண்டிகிடோமேன்னு கவலை பட்டேன்.
பிள்ளையார் அவர் கடமைய ஒழுங்கா செய்தாரு. சுக பிரசவத்துக்கு எல்லா வலியும் அனுபவிச்ச பின்னால ,டாக்டர் வேற வழியே இல்லை.ஆபரேஷன் பண்ணி பிள்ளைய எடுத்துரலாம்னு சொல்ல ,ஆபரேஷன் பண்ண வேண்டியதா போச்சு. வர்ஷி குட்டியும் தப்பித்தோம்,பிழைதொம்னு வெளி உலகத்துக்கு வந்துட்டா.
நீதி :
so friends ,be careful ,while you are asking something to god. be clear in ur statement.
நட்புடன்,
மகா...
Thursday, August 06, 2009 | Labels: மகா | 6 Comments
Subscribe to:
Posts (Atom)
















